குரோம்பேட்டை எம் ஐ டி தமிழ் மன்றம் நடத்திய தமிழ் கலாச்சார திருவிழாவில் குரோம்பேட்டை, ஸ்ரீமதி தேவ்குன்வார் நானலால் பட் மகளிர் வைணவ கல்லூரி தமிழ்த்துறை சார்பில் மாணவிகள் பத்து போட்டிகளில் பங்குபெற்று சிறப்பு பரிசாக தமிழ் விருது வெற்றிக்கோப்பையை பெற்றுள்ளனர். பரிசு பெற்ற மாணவியருடன் கல்லூரி முதல்வர் இரா.கீதா, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தி.செந்தமிழ்செல்வி, உதவி பேராசிரியர் ச.பாலசரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .